திருப்பத்தூர்:டிச:5, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தேசிய அளவிலான பாலியல் வன்முறைக்கு எதிரான பிரச்சாரம் உறுதிமொழி ஏற்பு மற்றும் கையெழுத்து இயக்கம் மற்றும் பிரச்சார பேரணியை மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார்
ஆண் குழந்தைகளையும் பெண் குழந்தைகளின் எத்தகைய பாகுபாடின்றி சமமாக வளர்ப்போம், வீட்டு வேலைகளை பெண்களும் ஆண்களும் சரி சமமாக பகிர்ந்து கொள்ளவும்
பெண்கள் விருப்பப்பட்ட உயர் கல்வி கற்பதை ஊக்குவிப்போம் அனைத்து துறை பணிகளிலும் பெண்களின் சம பங்கேற்பை உறுதி செய்வோம்
பெண்களின் பெயரில் சொத்துக்களை பதிவு செய்வதை ஊக்குவிப்போம்
அனைத்து செயல்பாடுகளிலும் பெண்களுக்கு முடிவெடுக்கும் அதிகாரத்தை உறுதி செய்வோம்
அனைத்து இடங்களிலும் பெண்கள் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் துன்புறுத்துவதை தடுப்போம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உறுதிமொழிகளை ஏற்றனர்
மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் கையெழுத்து இயக்கத்தை துவக்கி கொடி அசைத்தார்.
இந்த விழிப்புணர்வு பேரணி ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து பிரதான சாலை வழியாக சென்று தூயநெஞ்ச கல்லூரி வரை சென்று முடிவடைந்தது
இந்த நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குனர் கணபதி , ஓய்வு திட்ட அலுவலர் வட்டார ஒருங்கிணைப்பாளர் மற்றும் சுய உதவி குழு உறுப்பினர்கள், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்