கொல்கத்தா அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதுகலைபயிற்சி மருத்துவர் கொடூர கொலை சம்பவத்தை கண்டித்து!
தஞ்சாவூரில் பல்வேறு அமைப்பு கள் சார்பில் கண்டனஆர்ப்பாட்டம்!
தஞ்சாவூர் ஆகஸ்ட் 23
கொல்கத்தா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுகலை பயிற்சி மருத்துவர் கொடூர தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் .இந்த கொடூர கொலையை கண்டித்து இந்தியா முழுவதும் மருத்துவ மாணவர்கள் டாக்டர்கள் அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார் கள்.
பெண்கள் பாலியல் பலாத்காரத்தி ற்கு உள்ளாகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சாவூர் புதிய பஸ் நிலையம் அருகே தமிழ்நாடு அறிவியல் இயக்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், அன்பு வழி அறப்பணி மன்றம் மற்றும் பல்வேறு பெண்கள் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பயிற்சி பெண் மருத்துவரை கொலை செய்தவர் கள் தண்டிக்கப்பட வேண்டும் பெண்களுக்கு அனைத்து இடங்க ளிலும் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் என்று கோஷமிட்டனர். முன்னதாக புதிய பஸ் நிலையத்திலிருந்து பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வழியாக ஊர்வலமாக செல்ல முயன்றனர் அதற்கு போலீசார் அனுமதி அளிக்காததால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் மாவட்ட குழந்தைகள் நல குழுமம் தலைவர் உஷா நந்தினி விஸ்வநாதன் தலைமையில் மேயர் சண். ராமநாதன் துணை மேயர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் தொடங்கி வைத்தனர் .இன்னர் வீல் சங்க தலைவர் ரேகா, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலத்துணை த்தலைவர் சுகுமாரன், ஷெட் இந்தியா தொண்டு நிறுவன இயக்குனர் பாத்திமா ராஜ் காவல் ஆய்வாளர் சந்திரா, ஜனசேவா தொண்டு நிறுவனச் செயலாளர் சியாமளா சீலன் உள்பட ஏராள மானோர் கலந்து கொண்டனர்.