சென்னை, பிப்- 20,
பிரிட்ஜ் விளையாட்டு அறிவுத்திறன் மற்றும் அல்ஜைமர் நோயை தவிர்க்கிறது அல்லது குணமாக்குகிறது என்று பிரிட்ஜ் தேசிய பொருளாளர் சதீஷ்குமார் தெரிவித்தார்.
பிரிட்ஜ் விளையாட்டு இறுதி போட்டி மற்றும் நிறைவு விழா சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூவில் உள்ள இ- ஒட்டலில் இ.ஏ. நிர்வாக இயக்குநர் கவிதா சிங்கானியா ஏற்பாட்டில் இந்திய பிரிட்ஜ் கூட்டமைப்பு ஃபெடரேஷன, தமிழ்நாடு பிரிட்ஜ் சங்கமும் இணைந்து நடத்தியது.
இந்த விளையாட்டை பெரியளவில் ஊக்குவிக்கும் நோக்கில், இ ஏ -பிரிட்ஜ் சென்னை ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் செப்டம்பர் 2025ல் சர்வதேச பிரிட்ஜ் சாம்பியன்ஷிப்பை ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளது. இந்நிகழ்வில் உலக பிரிட்ஜ் கூட்டமைப்பு குழு உறுப்பினர் என். ஆர். கிரிபாகர் மூர்த்தி, பிரிட்ஜ் தேசியப் பொருளாளர் சதீஷ்குமார், தமிழ்நாடு பிரிட்ஜ் சங்கத் தலைவர் ஏ .ஸ்ரீதர், இந்திய பிரிட்ஜ் கூட்டமைப்பின் தலைவர் பிரசாத் கேனி,இஏ-பிரிட்ஜ் நிகழ்வு அமைப்பாளர் மற்றும் பிரிட்ஜ் பயிற்சியாளர் நாராயண் ஐயர் , தமிழ்நாடு பிரிட்ஜ் சங்கத் தலைவர் சுனில் வர்கீஸ்,ஆகியோர் கலந்து கொண்டனர்.
பிப்ரவரி 9,10 தேதிகளில் நடைபெற்ற இ ஏ-பிரிட்ஜ் தேசிய மகளிர் சாம்பியன்ஷிப் போட்டியில் வித்யா பட்டேல் கல்பனா குர்ஜார், பிப்ரவரி 11, 12 தேதிகளில் நடைபெற்ற ஸ்ரீமதி விஜயா ஜஜூ நினைவு தேசிய கலப்பு ஜோடி சாம்பியன்ஷிப் போட்டியில் சந்தீப் என்.கர்மாகர் மற்றும் மரியான் கர்மாகர் , பிப்ரவரி 13 முதல் 16, வரை நடைபெற்ற டோலானி அகில இந்திய ஓபன் தேசிய மாஸ்டர்ஸ் பிரிட்ஜ் சாம்பியன்ஷிப் போட்டியில்
சர்லா ஃபைபர்ஸ் அணி
ஜோடி அரவிந்த் வைத்யா, சுபம் ஆச்சார்யா ஆகியோர் வெற்றிபெற்றனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு மொத்தம் ரூ. 5,00,000/- பரிசுத் தொகையை பகிர்ந்தளிக்கப்பட்டது.
இது குறித்து பிரிட்ஜ் தேசியப் பொருளாளர் சதிஷ்குமார் தெரிவித்ததாவது:-
பிரிட்ஜ் உலகமெங்கும் பிரபலமாக விளங்கும் அறிவுத்திறன் , வளர்க்கும் சீட்டு கட்டை கொண்டு விளையாடும் ஒரு விளையாட்டு ஆகும். பிரிட்ஜ் என்பது தீவிரமான தந்திர உத்திகளைக் கையாளும் சீட்டாட்டம் என்பதாலேயே ஒரு சமூகமே தவறான கண்ணோட்டத்தில் பார்க்கிறது. இந்த விளையாட்டில் பல நல்ல விஷயங்களும் உள்ளன. சிறுவயதிலிருந்து விளையாடும்போது அறிவுதிறன் அதிகரிக்கும். அதுமட்டுமல்லாது டிமென்ஷியா அல்லது அல்சைமர் நோய் ஏற்படுவதைத் தாமதப்படுத்துகிறது, அல்லது முற்றிலும் தடுக்கிறது என்பதை ஆய்வுகள் நிரூபித்துள்ளன. மூளையின் செயல் திறனை வளர்க்கிறது. கல்வி,தொழில் துறைகளில் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட உதவுகிறது. இக்காரணங்களால் உலக பிரிட்ஜ் கூட்டமைப்பை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி இந்திய விளையாட்டுத் துறை, மற்றும் தமிழ்நாடு விளையாட்டு ஆணையமும் அங்கீகரித்துள்ளது.