நாகர்கோவில் அக் 30
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மூகாம்பிகா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி தொடங்கியது, இதனை மாவட்ட ஆட்சியர் அழகுமீனா கொடியசைத்து துவங்கி வைத்தார், இந்த பேரணியானது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து புறப்பட்டு டதி ஸ்கூல் வழியாக செட்டிகுளம் சந்திப்பு சென்று அங்கிருந்து டெரிக் சந்திப்பில் முடிவடைந்தது. இதில் நூற்றுக்கு மேற்பட்ட மருத்துவ கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் மேலும் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு குறித்த பதாதைகளை கைகளில் ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.மேலும் முன்னதாக மாவட்ட ஆட்சியர்.அழகுமீனா பேசுகையில்”30 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மார்பக புற்றுநோய் குறித்து சோதனை செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.