மயிலாடுதுறை மாவட்டம் ஏப். 29
மயிலாடுதுறை தரங்கம்பாடி தாலுக்காவில் அமைந்துள்ளது திருமெய்ஞானம்.. இங்கு மிக பழமையான மூவரால் பாடல் பெற்ற தமிழகத்தில் மேற்கு நோக்கி அமைந்துள்ள 55 சிவ ஆலயங்களில் ஒன்றான இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமான வாடா முலையாள் உடனுறை பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.
மேலும், காசி மயானம், கச்சி மயானம். காழி மயானம், நாலூர் மயானம், கடவூர் மயானம் எனும் பஞ்ச மயானங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. இவ்வளவு சிறப்புகள் பெற்ற இந்த திருமெய்ஞானம் பிரம்ப புரீஸ்வரர் ஆலயத்திலும், மேலும் பல யுக முடிவில் சிவபெருமான் வெகுண்டு பிரம்ம தேவரை எரித்து நீராக்கி விட்டார். பிரம்ம தேவரை உயிர்பிக்க தேவர்கள் இங்கு தவம் செய்ததால், இங்குள்ள பெரிய பெருமா எழுந்தருளி . பிரம்ம தேவருக்கு சிவஞானம் போதித்ததால் இவ்வூருக்கு திருமெய் என பெயர் விளங்கி ன்று எனவே தமிழக அரசு இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமான பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில், பெரிய பெருமாள் ஆலயத்திலும் திருமனம், உக்கிரசாந்தி பீமரதசாந்தி சஷ்டி பூர்ததி, சதாபிசேகம், நிச்சயதார்த்தம் போன்ற நிகழ்ச்சிகள் நடக்க அனுமதி வேண்டும் என திருக்கடையூரை சேர்ந்த பாலகிருஷ் என் என்ப வரும் ஊர் பொதுமக்களும் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் அவர்களிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.