சிவகங்கை : பிப்:25
சிவகங்கை மாவட்டத்தில் தற்போது நான்காம் ஆண்டு புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது . இந்த விழாவில் நடைபெற்ற பட்டிமன்ற நிகழ்ச்சிக்கு பேராசிரியர் ஞானசம்பந்தன் வருகை புரிந்தார் . அப்போது சிவகங்கை எழுத்தாளர் அ .ஈஸ்வரன் எழுதிய வாசிப்பை நேசிப்போம் என்ற புத்தகத்தை அவர் வெளியிட்டார் . அந்த நூலை சிவகங்கை வருவாய்க் கோட்டாட்சியர் விஜயகுமார் பெற்றுக்கொண்டார்.
இதை தொடர்ந்து அவர் பேசும்போது:
இன்றைய சமூகத்தில் இளைஞர்கள் உட்பட பல்வேறு தரப்பினர்களின் முழுக் கவனமும் செல்போன் பக்கம் திரும்பி இருக்கிறது . இவர்கள் தங்களின் பார்வையையும் , கவனத்தையும் புத்தகங்கள் பக்கம் திருப்ப வேண்டும் . அப்படித் திருப்பினால் தான் தமிழ் இன்னும் வளர்ச்சி அடையும் . தமிழ் மொழி தொன்மையானது . அதை நிலை நிறுத்த வேண்டியது நமது அனைவரின் கடமையாகும். எதை நாம் தொடர்ந்து பயன்படுத்தாமல் போகிறோமோ அது நாளடைவில் அவை இருக்கும் இடத்தை விட்டு இல்லாமல் போய்விடும் .எனவே பயன்பாடு என்பது மிக முக்கியமாகும் . ஒவ்வொருவருக்கும் ஒரு சுவை பிடிக்கும் . ஆனால் சுவைகளில் புத்தகச் சுவையே முதன்மையானது . அந்தச் சுவையை நாம் அனுபவிக்க புத்தகங்களை படித்தாக வேண்டும் .அப்படி படித்தால் தான் அதன் இனிமையை உணர முடியும் . புத்தகங்கள் வாங்குவது செலவு என்றாலும் அதன் வெளிப்பாடு வளர்ச்சிதான் மூளைக்கு வரவு தான் . இவ்வாறு அவர் பேசினார் .
விழாவில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அரசு அலுவலர்கள், பப்பாசி புத்தக அமைப்பினர் , முன்னாள் மாணவர் அமைப்பின் சார்பில் கோச்சிங் சென்டர் மருது , பேராசிரியர் டாக்டர் முத்துவேல் உள்பட ஏராளமானோர். விழாவில் பங்கேற்று சிறப்பித்தனர் .