தஞ்சாவூர்.மார்ச்.16.
தஞ்சாவூரில் சாகித்ய அகாடமி விருது பெற்ற ஆ. இரா.வேங்கடா சலபதிஎழுதிய திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908 என்ற நூல் நூல் அறிமுகம் நடைபெற்றது.
மக்கள் சிந்தனை பேரவை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில துணை தலைவர் பேராசிரி யர் கோ விஜயராமலிங்கம் தலைமை வகித்தார் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தமிழ்துறை மேனாள் தலைவர் பா. மதிவாணன் நூலை அறிமுகம் செய்து வைத்து பேசினார்.
முன்னதாக மக்கள் சிந்தனைப் பேரவை பொதுக்குழு உறுப்பினர் இரா.பன்னீர்செல்வம் அனைவரையும் வரவேற்றார் நிறைவாக பொதுக்குழு உறுப்பினர் கி.ஜெயக்குமார் நன்றி கூறினார்.



