நீலகிரி. ஏப்ரல். 15.
நீலகிரி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு சங்க கூட்டம் மாதாந்திர செயற்குழு கூட்டமாக கோத்தகிரியில் நடைபெற்றது. தலைவர் வாசுதேவன் அவர்கள் தலைமையிலும் , பொருளாளர் மரியம்மா துணை தலைவர் ஜெயந்தி , கூடுதல் செயலாளர் பீட்டர்,மக்கள் தொடர்பு அலுவலர் முகமது இஸ்மாயில் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் செயலாளர் முகமது சலீம் அமைப்பின் கடந்த மாத செயல்பாடுகள் மற்றும் எதிர்கால செயல்பாடுகள் குறித்து கூறினார் பின்னர் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 1. மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கண்காணிப்பு குழு உறுப்பினர்களின் கூட்டம் முறையாக நடத்த வேண்டும் என்றும் 2. கோத்தகிரி பகுதியில் அம்ருத் திட்டத்தில் குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட பகுதிகளை விரைவாக சரிசெய்து தரவேண்டும் என்றும். 3. கோத்தகிரி அரவேனு ஆடுபெட்டு பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின் ஏற்ற தாழ்வுகளை சரிசெய்ய புதிய மின்மாற்றி அமைத்து தரவேண்டும் என்ற அமைப்பின் கோரிக்கையை ஏற்று புதிய மின்மாற்றியை அமைத்து தர உத்தரவு வழங்கிய தமிழக மின் வாரியத்திற்கு அமைப்பின் சார்பில் நன்றி தெரிவிப்பது என்றும் 4.கோத்தகிரி காம்பாய் கடை வளைவு பகுதியில் பொதுமக்கள் நலன் கருதி அமைப்பின் கோரிக்கையை ஏற்று மாவட்ட ஆட்சியர் அவர்கள் அந்த பகுதியில் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் விதமாக ஜீப்ரா கிராசிங் லைன் மற்றும் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என்று நெடுஞ்சாலை துறைக்கு கொடுத்த உத்தரவின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைப்பின் சார்பில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக கூட்டத்தில் அமைப்பின் இணை செயலாளர் வினோபா பாப் அவர்கள் வரவேற்புரை வழங்கினார், செயற்குழு உறுப்பினர்கள் , திரைசா, விக்டோரியா , யசோதாசெல்வி, ரோஸ்லின், லெனின் மார்க்ஸ், விபின் குமார், டானிங்டன் சுரேஸ், அம்பேத்கர் நகர் சதீஷ் மற்றும் உறுப்பினர்கள் விஜயா, ஏசு ராணி உட்பட பலர் கலந்துகொண்டனர் முடிவில் ஆலோசகர் பிரவின் அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார்.
ப்ளுமவுண்டன் நுகர்வோர் சங்க பாதுகாப்பு

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics