சுசீந்திரம்.மே.2
வெள்ளக்கோவில் மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளை ஆயிர நகர வைசியர் இளைஞர் அமைப்பு மற்றும் வெள்ளக்கோயில் அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய 61 வது இரத்ததான முகாம் வெள்ளக்கோவில் ஆயிர வைசியர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இம்முகாமை வெள்ளகோவில் அரசு மருத்துவமனை மருத்துவர் டாக்டர் ராஜலஷ்மி துவக்கி வைத்தார்.
வெள்ள்கோயில் ஆயிர நகர வைசியர் இளைஞர் அமைப்பின் தலைவர் தலைமை வகித்தார்
மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளை தலைவர் இரா.ராஜ்குமார் முன்னிலை வகித்தார்.
சுமார் 120க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தனர். இதில் 111 யூனிட் இரத்ததானம் பெறப்பட்டு தாராபுரம் அரசு ரத்த வங்கி மருத்துவர் சத்தி ராஜன் அவர்களிடம் வழங்கப்பட்டது.
நன்றியுரை மகாத்மா காந்தி நற்பணி மன்ற செயலாளர் சீனிவாசன் தெரிவித்தார்.
முகாம் ஏற்பாடுகளை துணைச் செயலாளர் மு தனுஷ் ராம் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
ஆயிர நகர வைசியர் இளைஞர் அமைப்பு சார்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.