திருவாரூர் பிப்ரவரி 9
டெல்லியில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது இந்த வாக்கு எண்ணிக்கையில் ஆம்ஆத்மி கட்சியை வீழ்த்தி 27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ள நிலையில் இந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும்
விதமாக பல்வேறு பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சியினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் திருவாரூரில் உள்ள பழைய பேருந்து நிலையம் அருகே பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட துணை தலைவர் சங்கர் மற்றும் நகர தலைவர் கணேசன் தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
அதனைத் தொடர்ந்து பவித்திரமாணிக்கம் மற்றும் திருவாரூர் தெற்கு வீதியிலும் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.