மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை பஜனை மட சந்து அமைந்துள்ளது.தமிழக அரசின் டாஸ்மாக் மதுபானக்கடை.இந்த கடையில தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவ படத்தை பாரதிய ஜனதா கட்சியின் ஜெகப்பிரியா நகர துணை தலைவர் . நகர செயலாளர் லட்சுமி தலைமையில் மாவட்டத் தலைவர் நாஞ்சில் பாலு மாவட்டத் துணைத் தலைவர் மோடி கண்ணன் மற்றும் பா.ஜ.க வினர் ஒட்ட வந்தனர்.இதை மயிலாடுதுறை மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பாலாஜி தலைமையில் வந்திருந்த காவல் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர்.இதனால் காவல் துறையினருக்கும் பா.ஜ.க வினர் வாக்குவாதம் ஏற்பட்டது இதனையொட்டி பா.ஜ.க வினரை காவல் துறையினர் கைது செய்தனர்.இதில் மாவட்ட பா.ஜ.க துணை தலைவர் மோடி கண்ணன் மற்றும் இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர் இதனால் அந்த பகுதியில் பெரும்பரப்பரப்பு ஏற்பட்டது.



