திருப்புவனம் ஆகஸ்ட்:09
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள பூவந்தி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ பந்தலுடைய அய்யனார் அருள்மிகு ஒய்யவந்தாள் அம்மன் கோவில்
திருவிழா நடைபெறுவது
தொடர்பாக இரு தரப்பினர் உடனான அவசர சமாதானக் கூட்டம்
திருப்புவனம் வட்டாட்சியர் தலைமையில் பூவந்தி காவல் ஆய்வாளர் திருப்புவனம் வருவாய் ஆய்வாளர் மற்றும் பூவந்தி கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் முன்னிலையில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினரைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர் இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் இரு தரப்பினருக்கும்
சபையில் பேச வாய்ப்பளித்து சமாதான முடிவு எடுக்கப்பட்டது.
அந்த வகையில்
கோவில் திருவிழாக்களில் முதல் மரியாதை யாருக்கும் வழங்கப்படக் கூடாது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கூட்டம் நிறைவு பெற்றது.