திருப்பத்தூர் மாவட்டம்
திருப்பத்தூர்:அக்:18, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கடந்த 12 ஆண்டுகளாக காணாமல் போன பீகார் மாநிலத்தைச் சார்ந்த அனிலா தேவி அவர்களை கடந்த 7 ஆண்டுகளாக திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள உதவும் உள்ளங்கள் மனநல காப்பகத்தில் பாதுகாப்பான முறையில் பாதுகாக்கப்பட்ட நிலையில் இந்த தகவலை அறிந்த குடும்பத்தாரிடம் அவருக்குத் தேவையான மருந்துகள் மற்றும் மருந்து சான்றுகளுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டார். இந்நிகழ்வில் உதவும் உள்ளங்கள் மனநல காப்பக நிர்வாகி ரமேஷ் அவர்களும், சமூக பணியாளர்கள், செவிலியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அலுவலர்கள் உள்ளனர்.