மயிலாடுதுறை.20
மயிலாடுதுறையில் ஈம கிரியை மண்டபம் கட்ட பூமி பூஜை. மயிலாடுதுறை நகராட்சி 19 வது வார்டு சின்ன மாரியம்மன் கோவில் தெருவில் காவிரி கரையோரம் இருந்த ஈம கிரியை மண்டபம் இடிந்துவிழும் நிலையில் மிகவும் சேதம் அடைந்ததை அடுத்து மயிலாடுதுறை சட்ட மன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஈம கிரியை மண்டபம் கட்டுவதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. நகராட்சி தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜகுமார் கலந்துகொண்டு பூமிசெய்து அடிக்கல் நாட்டி கட்டிட பணிகளை தொடங்கி வைத்தார். இதில் நகராட்சி துணைத்தலைவர் சிவக்குமார், வார்டு உறுப்பினர்கள் காந்தி, செந்தில் உள்ளிட்ட நகராட்சி அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.