காஷ்மீர் பகல்காமில் கடந்த பாகிஸ்தான் தீவிரவாதிகளால் தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து மயிலாடுதுறை ஆர்டிஓ அலுவலகம் முன்பு பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் நாஞ்சில்பாலு தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர்கள் எஸ் டி எம் செந்தில், மோடி கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில விவசாய அணி தலைவர் வெங்கடேசன், மாநில மகளிரணி தலைவி உமாரதி,முன்னாள் மாவட்ட தலைவர்கள் சதீஷ், வெங்கடேசன், செயற்குழு உறுப்பினர் தியாகராஜன் உட்பட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் மண்டல் தலைவர்கள் சஞ்ஜீவ், நடராஜ், ராஜகோபால், ஒன்றிய பொதுச்செயலாளர் மதன், மகளிரணி மல்லிகா, காயத்திரி உட்பட பலர் கலந்துகொண்டனர்.



