சிவகங்கை ஆக:24
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டத்தில் கலந்து கொண்ட சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது கடந்த சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் அதிமுக கூட்டணி வைக்காவிட்டால் அதிமுக எதிர்க்கட்சியாய்க் கூட வந்திருக்காது என்று மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கூறியிருக்கிறாரே என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் அளித்த பதில் பாரதிய ஜனதா கட்சியுடன் யார் கூட்டணி வைத்தாலும் மேலே போக முடியாது வெற்றி பெறவும் முடியாது ஏனெனில் பாஜக என்பது எப்போதும் ஒரு கீழ் இழுக்கும் சக்தியாகத் தான் உள்ளது.
எனவே அவர்களோடு யார் கூட்டணி வைத்தாலும்
தோல்வியை நோக்கி கீழ்நோக்கி வந்து விடுவார்கள். அதுதான் அதிமுக கட்சியில் நடந்திருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும்
தமிழகத்தில் அதிமுக தான் இரண்டாவது பெரிய கட்சியே தவிர பாஜக அல்ல என்பதை உணர வேண்டும் என்று பேசினார். அப்போது காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி சிவகங்கை நகர் காங்கிரஸ் தலைவர் விஜயகுமார் வட்டாரத் தலைவர்கள் மதியழகன் லட்சுமணன் உள்பட காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.