ஈரோடு மே 1
மக்கள் சிந்தனை பேரவையின் மாநில பொதுக்குழுக் கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பேரவையின் மாநிலத் தலைவர் ஸ்டாலின் குணசேகரன் தலைமை வகித்தார்.
சென்னை, தஞ்சாவூர், நாமக்கல், மதுரை, திருப்பூர், சேலம், கரூர், ஈரோடு உள்ளிட்ட பல மாவட்டங்களிலிருந்து பேரவையின் பொதுக்குழு உறுப்பினர்கள் இதில் பங்கேற்றனர்.
மாநில அளவில் பேரவை வளர்க்கப்பட வேண்டிய பல அம்சங்கள் பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.
ஈரோடு மாவட்டத்தில் ஒரு அரசுப் பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்பட வேண்டும். ஒரு தனிப் பல்கலைக்கழகம் உருவாக்குவதற்கான அனைத்துத் தனித் தகுதிகளும் தேவையும் ஈரோடு மாவட்டத்தில் உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் ஏற்கனவே செயல்பட்டு வரும் பாரதியார் பல்கலைக்கழகத்தின் விரிவாக்க
மையத்தை மூடுவதற்கான முடிவை பாரதியார் பல்கலைக்கழகம் எடுத்திருப்பதாக தெரிகிறது.
இந்த விரிவாக்க மையத்தை எக்காரணம் கொண்டும் மூடப்படக்கூடாது என்றும் அடுத்த கட்டமாக பல்கலைக்கழகம் இங்கு கொண்டுவரப்படுவதற்கு முன்னோட்டமாக விரிவாக்க மையம் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்றும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .
பேரவையின் மாநில துணைத்தலைவர் பேராசிரியர் விஜயராமலிங்கம், மாநில செயலாளர் அன்பரசு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஈரோட்டில் செயல்படும் பாரதியார் பல்கலைக்கழக விரிவாக்க மையத்தை மூடக்கூடாது

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics