சிவகங்கை,மார்ச் 31
வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், செட்டிநாடு நான்காம் ஆண்டு இளங்கலை வேளாண்மை படிக்கும் மாணவிகள் அபர்ணா.சா, ஹேமலதா.வை தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள கிராமங்களில் தங்கி விவசாயிகள் பயிர் விளைவிக்கும் முறைகளையும் அதன் தன்மைகளையும் அறிந்து கொண்டு வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக புதுவாடி கிராமத்தில் செல்வம் – சின்னம்மாள் இவர் கடந்த 7 ஆண்டுகளாக இயற்கை முறை விவசாயம் செய்து கொண்டு வருகின்றனர். அவர் மாணவிகளுக்கு இயற்கை முறை விவசாயத்தின் நன்மைகளையும் அதன் முக்கியத்துவத்தையும் அடுத்து கூறினார்.இவர் வேதி உரங்களை பயன்படுத்தாமல் இயற்கை உரங்களை பயன்படுத்தி வருகிறார். பஞ்சகவ்யா, பூச்சிவிரட்டி , தசகவ்யா, ஐந்திலை கரைசல் ,மீன் அமினோ கரைசல், மண்புழு உரம் போன்ற ‘ ஒன்றன் கழிவு ஒன்றுக்கு ‘ என்ற வாக்கியத்தின்படி இயற்கை முறைகளைக் கொண்டு வேளாண்மை செய்து வருகிறார். மேலும், 16 வகை நெல் ரகங்களை விவசாயம் செய்கிறார். மதிப்பு கூட்டுதல் மூலம் அதிக லாபம் ஈட்டுவதாக மாணவிகளிடம் தெரிவித்தனர் .