பூதப்பாண்டி – டிசம்பர்-24-
அழகிய பாண்டியபுரம் பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் பேரூராட்சி தலைவர் ஜெயஷீலா கேட்சன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்க்கு பேரூராட்சியின் செயல் அலுவலர் சதீஷ்குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் 15 – வது நிதிக்குழு மானிய திட்டம் மற்றும் எப்.பி.டீ.பி ஆகிய திட்டத்தின் கீழ் பேரூராட்சி பகுதிகளில் வளர்ச்சி பணிகளும் மூன்று இலட்சம் ரூபாய் செலவில் குடிநீர் பழுது பார்த்தலும் நடைபெற்றது. கூட்டத்தில் புதிய வருட பிறப்பிற்க்கும், கிருஸ்மஸ் பண்டிகைக்கும் எல்லோருக்கும் தலைவர் வாழ்த்து தெரிவித்தார். நடைபெற்ற கூட்டத்தில் அனைத்து கவுன்சிலர்களும் கலந்து கொண்டார்கள்