தஞ்சாவூர் பெரிய கோயிலில் முதியவர்கள் மாற்று திறனாளிகள் சென்று வழிபடுவதற்கு வசதியாக பேட்டரி கார் சேவை தஞ்சாவூர் மக்களவை உறுப்பினர் ச.முரசொலி தொடங்கி வைத்தார்
பின்னர் அவர் செய்தியாளர் களிடம் தெரிவித்ததாவது:
தஞ்சாவூர் பெரிய கோவிலில் முதியவர்கள், மாற்றுத்திறனாளி கள் வெளியிலிருந்து உள்ளே செல்வதற்கு வசதியாக சிட்டி யூனியன் வங்கி அலுவலர்கள், தஞ்சாவூர் கிங்ஸ் ரோட்டரி சங்க நிர்வாகிகள் இணைந்து 3 பேட்டரி கார்களை வழங்குகின்றனர். இதில் முதல் கட்டமாக ஒரு பேட்டரி காரை சுற்றுலா துறையிடமும், இந்திய தொல்லியல் துறையிடமும் ஒப்படைத்தனர் .அடுத்தத்த நாட் களில் மற்ற பேட்டரி கார்கள் வழங்க உள்ளனர். இந்த வாகனத் தில் செல்வதற்கு கட்டணம் ஏதும் கிடையாது
மக்களவையில் விடுக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் தஞ்சாவூர் பெரிய கோவிலை மேம்படுத்துவதற்கு முதல் தவணை யாக ரூபாய் 25 கோடியை மத்திய சுற்றுலாத் துறை ஒதுக்கீடு செய்து ள்ளது. இது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு ஒரு மாதத்தில் ஒப்பந்தப்புள்ளி கோரப்படவுள்ளது .இதன் பின்னர் பணிகள் நடைபெறும். இதே போல வெளியிலுள்ள அகழியை மேம் படுத்துவதற்காக இரண்டாவது தவணை ஒதுக்கீடு செய்யுமாறு மத்திய அரசிடம் கேட்டுள்ளோம் என்றார். அவர்.
அப்போது மேயர் சண் ராமநாதன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர் பேட்டரி காரில் ஒரே நேரத்தில் 8 பேர் செல்லலாம்.
தஞ்சாவூர் பெரிய கோவிலில் மாற்றுத்திறனாளிகளுக்கான பேட்டரி கார் சேவை தொடக்கம்

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics