கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் வட்டம், பி.ஆர்.ஜி.மாதேப்பள்ளி ஊராட்சியில், பர்கூர் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தை, “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்ட கள ஆய்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் .ச.தினேஷ் குமார் நேரில் பார்வையிட்டு, விவசாயிகளுக்கு வழங்கப்படும் விதை பொருட்கள் மற்றும் உரங்களின் இருப்பு குறித்து கேட்டறிந்தார். உடன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா, வேளாண்மைத்துறை உதவி இயக்குநர் சிவசங்கரி உள்ளிட்ட பலர் உள்ளனர்.



