சங்கரன்கோவில். நவ.10.
சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியம், பட்டாடைக்கட்டி ஊராட்சி, வென்றிலிங்கபுரம் மற்றும் தர்மத்துரணி கிராமத்தில் ரூபாய் 14 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டிடம் மற்றும் ரூபாய் 36 லட்சம் மதிப்பீட்டில் பள்ளி சுற்றுச்சுவர் கட்டி முடிக்கப்பட்டது இதனை மாணவர்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடந்தது நிகழ்ச்சிக்கு பட்டாடை கட்டி ஊராட்சி தலைவர் சுமதி கனகவேல் தலைமை வகித்தார் மாவட்ட கவுன்சிலர் ராஜா தலைவர் , ஒன்றிய குழு தலைவர் மாதவி முன்னிலை வகித்தனர் இதில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ மற்றும் தென்காசி எம்பி ராணி ஸ்ரீகுமார் கலந்துகொண்டு புதிய கட்டிடங்களை மாணவர்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வராஜ், தலைமை ஆசிரியர்கள் சந்தனகுமார், துரைப்பாண்டி ஒன்றிய கவுன்சிலர் அருள்சீலி, ஒன்றிய செயலாளர்கள் ராமச்சந்திரன், பெரியதுரை,
பள்ளி மேலாண்மை குழு தலைவர் சுவிதா, சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ், பாண்டியராஜன், கனகவேல் , மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், கிளைச் செயலாளர்கள், பள்ளி ஆசிரியர்கள் , மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்



