திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வரும் ஜுன் 14 ம் தேதி கும்பாபிஷேக பணிகள் நடைபெறுகிறது.
இதனையொட்டி திருப்பரங்குன்றம் முருகனின் திருக்கோவிலில் உப கோவில்களான சரவணப்பொய்கை ஆறுமுகசாமி கோவில் , பால் சுனை கண்ட சிவன் கோவில்,சப்த கன்னிமார் திருக்கோவில்கள் உள்பட மூன்று உப கோயில்களுக்கு இன்று பாலாலய பூஜைகளுடன் துவங்கியது.
திருப்பரங்குன்றம் முருகன் கோவில் சாணிக்கப்பட்டார்கள் சாமிநாதன் ரமேஷ் செல்லப்பா ஆகியோர். முன்னிலையில் திருக்கோயில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க யாகம் வளர்க்கப்பட்டு உப கோயில்களில் திருப்பணிக்காக ஆலய பூஜைகள் நடைபெற்றது. கோவில் இணை ஆணையர் சூரிய நாராயணன் மற்றும் அறங்காவலர்கள் சண்முகசுந்தரம் மணி செல்வன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்