நாகர்கோவில் அக் 18
கன்னியாகுமரி மாவட்டம் குமார கோயில் பகுதியில் செயல்பட்டு வரும் நூருல் இஸ்லாம் ஆர்ட்ஸ் கலை கல்லூரிக்கு செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து பல மாதங்களாக மோசமாக காணப்படுகிறது. இதனை
பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினரும், நகராட்சி நிர்வாகமும் கண்டு கொள்ளவில்லை.
இதனால் தினந்தோறும் இச்சாலையை பயன்படுத்தும் நூற்றுக்கணக்கான கல்லூரியில் படித்து வரும் மாணவ, மாணவிகள் மற்றும் இப்பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நகராட்சி நிர்வாகம் உடனடியாக சாலையை சீரமைத்து தர அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.