ராமநாதபுரம், ஜுலை 23-
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தொண்டி பேரூராட்சியில் ராலிஸ் ஸ்போர்ட்ஸ் மைதானத்தில் அல்ஹிலால் பள்ளி தலைமை ஆசிரியை முனைவர். பெனீடா ஜாஸ்மின் தலைமையில் கல்வி தந்தை பி.எஸ்.அப்துல் ரஹ்மான் நினைவு சுழற் கோப்பைக்கான பள்ளிகளுக்கு இடையான இறகுபந்து விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. விளையாட்டுப் போட்டிக்கு சிறப்பு விருந்தினராக அமீர் சுல்தான் அகாடெமி பள்ளி தாளாளர் அப்துல் ரவூப் நிஸ்தார் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட இறகு பந்து கழகம் மாவட்ட துணைத் தலைவர் எம் சாதிக் பாட்சா மற்றும் அனைத்து பள்ளி ஆசிரியர்களும் கலந்து கொண்டு முன்னிலை வகித்தனர். பத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடினர். இறுதி ஆட்டத்தில் அல்ஹிலால் பள்ளி மாணவிகள் நூருல் அஜிஸா மற்றும் முஸ்ஃபிரா பானு வெற்றி பெற்றனர். சுழற்கோப்பையும் நினைவுபரிசு பெற்றனர். இரண்டாம் இடம் புனித நார்பட் பள்ளி மாணவிகள் பெற்றனர். அரை இறுதி ஆட்டங்களில் தொண்டி இஸ்லாமிக் மாதிரி பள்ளி மாணவிகள் வெல்கம் உயர்நிலைப்பள்ளி மாணவிகள் பெற்றனர். அனைத்து மாணவிகளுக்கும் பரிசுகளை சான்றிதழ்களையும் பள்ளியின் தாளாளர் வழங்கினார். பள்ளி ஆசிரியர் நன்றி கூறினார்.