தருமபுரியில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு JCI Dharmapuri Wings நடத்திய “பெண்களுக்கு எதிரான வன்முறையை நிறுத்து” என்ற தலைப்பில் மாபெரும் விழிப்புணர்வு பேரணி தருமபுரி நான்கு ரோடு முதல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வரை நடைபெற்றது. இப்பேரணியை தருமபுரி வட்டாட்சியர் காயத்ரி, உதவி ஆட்சியர் சௌந்தர்யா, கிராமபுற சுகாதார இயக்குனர் சாந்தி ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இந்தப் பேரணியில் சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரி மற்றும் அங்காளம்மன் பாரா மெடிக்கல் கல்லூரியின் மாணவிகள் கலந்து கொண்டனர் .கையில் பெண்களுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர் . இதனை அடுத்து மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் மாணவிகள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் அங்காளம்மன் பாராமெடிக்கல் கல்லூரியின் தாளாளர் சிலம்பரசன், சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரியின் முதல்வர் பிரேமா குமாரி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
ஜே சி ஐ தருமபுரி சார்பாக பிரபாகரன்,நர்மதா சசிகுமார் ,அன்பரசு கலைவாணி ,தேவகி கோகுல்ராஜ் ,முருகேசன், குளோபல் மருத்துவமனை சார்பாக குணா ஆகியோர் கலந்து கொண்டனர்.