முஞ்சிறை அருகே மகளிர் முன்னேற்றத்திற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி தென்தாமரைகுளம்., பிப். 19. கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்க கலை மற்றும் அறிவியல் கல்லூரி சமூகப்பணித்துறை மற்றும் கன்னியாகுமரி சமூக சேவை சங்கம் இணைந்து மகளிர் முன்னேற்றத்திற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி முஞ்சிறை அருகே நடந்தது. இந்தநிகழ்ச்சியில் கன்னியாகுமரி சமூக சேவை சங்க திட்ட அலுவலர் நிஷா தலைமை தாங்கி, மகளிர் முன்னேற்றத்திற்கான விழிப்புணர்வு முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். மேலும் இந்நிகழ்ச்சியில் குமாரி புஷ்பலதா, ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியை கலந்து கொண்டு மகளிர் முன்னேற்றத்திற்கான தகவல்களை விளக்கினார். இதனால், கலந்து கொண்ட மாணவர்கள் மற்றும் பொது மக்கள் பயன் அடைந்தனர் . இந்நிகழ்ச்சியில் 60க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி சார்பில்
உதவி பேராசிரியர் தீபன் ராஜ் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியை கல்லூரியின் முதுகலை சமூகப்பணித்துறை முதலாமாண்டு மாணவி ஆஞ்சலோ ஒருங்கிணைத்திருந்தார். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.



