சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக எய்ட்ஸ் தினம் 2024ஐ முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் அவர்கள் தலைமையில் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. உடன் மாவட்ட சுகாதார அலுவலர் மரு. எஸ் மீனாட்சி துணை இயக்குனர் ( காச நோய்) மரு. வெள்ளைச்சாமி அலுவலர் ( மருத்துவக் கல்லூரி) மரு. மனோகரன் மாவட்ட திட்ட மேலாளர் கா நாகராஜ் மாவட்ட மேற்பார்வையாளர் வாருணி தேவி மருத்துவ அலுவலர் (ART கூட்டு மருத்துவ சிகிச்சை மையம்) மரு .வெற்றி செல்வி உட்பட மருத்துவத்துறை சார்ந்த அலுவலர்கள் பணியாளர்கள் தமிழ்நாடு மாநில அரசு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க பணியாளர்கள் தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கல்லூரி மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



