கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பாக, குழந்தை திருமணம் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகள் அனைத்து அரசு மற்றும் தனியார் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் காட்சிப்படுத்தும் பொருட்டு, விழிப்புணர்வு பதாகைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் .ச.தினேஷ் குமார் ., அவர்கள் வெளியிட்டார். உடன், மாவட்ட வருவாய் அலுவலர் .அ.சாதனைக்குறள், வருவாய் கோட்டாட்சியர் .ஷாஜகான், மாவட்ட சமூக நல அலுவலர் .சக்தி சுபாசினி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) .முனிராஜ் உள்ளிட்ட பலர் உள்ளனர்.



