தர்மபுரி மாவட்ட போக்குவரத்து காவல்துறை சார்பில் இருசக்கர வாகன ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நான்கு ரோட்டில் கல்லூரி மாணவிகள் மூலம் துண்டு பிரச்சாரங்கள் விநியோகிக்கப்பட்டது இதில் காவல் உதவியாளர் சின்னசாமி மற்றும் காவலர்கள் சதீஷ்குமார் ரகுநாதன் விநாயகமூர்த்தி கலந்து கொண்டனர் அப்போது காவல் உதவியாளர் கூறுகையில் 18 வயது ஆகாமல் வாகனம் ஓட்டும் மைனர்களுக்கும் அவர்களுக்கு வாகனம் கொடுப்பவர்களுக்கும் எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு 18 வயது ஆகாதவர்கள் வாகனம் ஓட்டினால் அந்த வாகனத்தின் rc ரத்து செய்யப்படும் 18 வயது உட்பட்டோர் மோட்டார் வாகனம் ஓட்டினால் வாகனத்தின் உரிமையாளர்களுக்கு அல்லது மைனரின் பெற்றோர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் 18 வயது ஆகாத மைனர் வாகனத்தை ஓட்டினால் அவருக்கு 25 வயது வரை வாகன ஓட்டுனர் உரிமம் வழங்கப்பட மாட்டாது 18 வயதுக்கு உட்பட்டோர் மோட்டார் வாகனம் ஓட்டினால் வாகனத்தின் உரிமையாளர்களுக்கு அல்லது மைனரின் பெற்றோர்களுக்கு மூணு வருடம் சிறை தண்டனை வழங்கப்படும் இவ்வாறு காவல் ஆய்வாளர் கூறினார் சாலை விதிகளை கடைபிடிப்போம் விபத்தில்லா தமிழகத்தை உருவாக்குவோம்



