கிருஷ்ணகிரி செப்டம்பர் 16: கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தொகுதியான பர்கூர் அருகே ஜெகதேவி ஸ்ரீஅருள்மிகு பாலமுருகன் திருக்கோயிலில் நடைபெற்ற திமுக தொண்டரின் திருமண விழாவில் திமுக கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன் கலந்து கொண்டார். அவருக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் சக்திவேல்பாலாஜி கும்ப மரியாதையுடன் பரிவட்டம் கட்டி வரவேற்பு கொடுத்தார். பின்னர் திருமண விழாவில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன், தமிழக முதல்வரின் முத்தான திட்டங்களை எடுத்துரைத்து, இவை அனைத்தும் பொதுமக்கள் பெருமளவு வரவேற்பு கொடுப்பதாகவும், மேலும் அந்நிய நாட்டில் இருந்து முதலீடுகளை ஈர்த்து தமிழகம் திரும்பிய முதல்வர், கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கும் வேலைவாய்ப்பினை உருவாக்கித் தந்ததற்கு நன்றிகளை தெரிவித்துக் கொண்டார். இந்த திருமண நிகழ்ச்சியில் மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் ஜே.கே.கிருபாகரன், மாவட்ட பொருளாளர் கதிரவன், மாநில பொதுக்குழு உறுப்பினர் அஸ்லாம், ஊர் கவுண்டர் வேலு, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வி.சரவணன், ஆசிரியர் சுப்பிரமணியம், ஊர் செட்டியார் நாகராஜன், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி துணை அமைப்பாளர் ரூபேஷ், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் ஜெயேந்திரன், துணை அமைப்பாளர் ராமச்சந்திரன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் சுரேந்தர், ஜெகதேவி ஊராட்சி சார்ந்த நஞ்சுண்டன், ரமேஷ், சுரேஷ், மாதேஸ்வரன், வெங்கடேசன், நவீன்குமார், கார்த்திகேயன், ஜெகதேவி ஊராட்சியைச் சேர்ந்த கழக மூத்த முன்னோடிகள் அனைவரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
தொண்டரின் திருமண விழாவில் கலந்து கொண்ட

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics