புதுக்கடை, பிப்- 13
புதுக்கடை அருகே முஞ்சிறை பகுதியை சேர்ந்தவர் அர்ஜுன் (30). இவர் முஞ்சிறை வட்டார வளர்ச்சி அலுவலக உதவியாளராக பணிபுரிகிறார். இவர் நேற்று காலை தனது மனைவி ஹரிஷ்மா, 3 வயது குழந்தையுடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். முஞ்சிறை வட்டார வளர்ச்சி அலுவலக சந்திப்பில் வைத்து பைக்கை திருப்புவதற்காக நிறுத்தியுள்ளார். அப்போது பின்னால் மற்றொரு பைக்கில் வந்த 2 நபர்கள் திடீரென ஹரிஷ்மா கழுத்தில் கிடந்த ஒன்றரை பவுன் செயினை இழுத்து பறிக்க முயற்சித்துள்ளனர்.
உடனே ஹரிஷ்மா சத்தமிட்டு, . தங்க சங்கிலியை இறுக பிடித்ததால் திருடர்கள் கையில் சங்கிலி கிடைக்கவில்லை. உடனே திருடர்கள் தப்பி ஓடிவிட்டனர். இது தொடர்பாக அர்ஜுன் புதுக்கடை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து திருட முயன்ற நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.