By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விஸ்வகர்மா அமைப்பின் தலைவர் மீது தாக்குதல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > விஸ்வகர்மா அமைப்பின் தலைவர் மீது தாக்குதல்
கனஂனியாகுமரிமாவட்டம்

விஸ்வகர்மா அமைப்பின் தலைவர் மீது தாக்குதல்

Last updated: October 19, 2024 12:33 pm
October 19, 2024 29 Views
Share
SHARE

 நாகர்கோவில் அக்  19 

 

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாகர்கோவில் மாநகர் மாவட்ட செயலாளர் அல்காலித் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தமிழ்நாடு விஸ்வகர்மா இயக்கத்தின் தலைவரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொண்டருமான சந்திரன் கடந்த செப்டம்பர் மாதம் 24 ஆம் தேதியன்று,  மூன்றுபேர் கொண்ட கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து சந்திரன் ரத்தக் காயத்துடனே கோட்டாறு காவல்நிலையத்தில் சென்று புகாரும் கொடுத்தார். அங்கிருந்தே ஆம்புலன்ஸில் செல்லும் அளவுக்கு படுகாயம் அடைந்திருந்த சந்திரன், ஆம்புலன்ஸிலேயே சென்று  ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 

ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் பத்துநாட்களுக்கும் மேலாக உள்நோயாளியாக சிகிச்சையில் இருந்து வீடு திரும்பினார் சந்திரன். இந்தச் சம்பவம் நடந்து 25 நாட்கள் கடந்த நிலையிலும் கோட்டாறு காவல் நிலைய போலீஸார் இதுவரை முதல் தகவல் அறிக்கைகூட பதிவு செய்யவில்லை. அதனாலேயே குற்றவாளிகளை பிடித்து விசாரிக்கக்கூட இல்லை. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளரான நானே நேரில் சென்று கோட்டாறு காவல் நிலையத்தில் இதுகுறித்து முறையிட்டேன். அதன் பின்பும்கூட முதல் தகவல் அறிக்கை பதியப்படவில்லை. 

 

இந்தச் சம்பவத்தில் தனக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்தும், குற்றவாளிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை எனவும் சந்திரன், குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனுகொடுத்து விளக்கியும் குற்றவாளிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்படாத சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. சந்திரனைக் குண்டர்கள் தாக்கியதில் கன்னத்தில் ரத்தகாயம், அதனால் போடப்பட்டுள்ள தையல், பற்கள் சேதம் என இருந்தும் காவல்துறையினர் வழக்குப்பதியவில்லை என்பதை எப்படிப் புரிந்துகொள்வது? அதேநேரம் எளிய மக்களுக்காக களத்தில் நிற்பவர்கள் மீது யாரேனும் பொய்புகார் கொடுத்தால், அது பொய் புகார் எனத் தெரிந்தும் வேகம் காட்டுகிறது காவல்துறை. அப்படி விசிக நாகர்கோவில் மாநகர் மாவட்ட செயலாளரான என் மீதே நேசமணிநகர் காவல்நிலையத்தில் பொய் புகார் கொடுக்கப்பட்டதன் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

ஆனால் ஒரு உண்மை சம்பவத்திற்கு வழக்குப்பதிவு செய்யாமல் இழுத்தடிக்கின்றனர். சந்திரனைத் தாக்கியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் 29 ஆம் தேதி, செவ்வாய் கிழமை ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரிடம் நீதிகேட்டு முறையிடும் நிகழ்வை விசிக சார்பில் முன்னெடுப்போம்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You Might Also Like

பூதப்பாண்டியில் உங்களுடன் ஸ்டாலின்

ரூ 4.23 கோடி ஊழல் முறைகேடு; தர்மபுரம் முன்னாள் ஊராட்சி தலைவி மீது நடவடிக்கை எடுத்திட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாலை மறியல் போராட்டம்

குழித்துறையில் மீனவர் தூக்கு போட்டு தற்கொலை

தேரூரில் 16.50 இலட்சம் ரூபாய் செலவில் புதிய காங்கிரீட் தளம் அமைக்கும் பணி

பொய் புகார் அளிக்க சதி திட்டம் தீட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திமுக பகுதி கழக இளைஞர் அணி துணை அமைப்பாளர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
மாவட்டம்

ஆடி நிறைவு வெள்ளியை முன்னிட்டு பக்தர்களுக்கு கூல் பிரசாதம்

August 17, 2024 63 Views
பணிகள் குறித்து அலுவலர்களுடன் ஆலோசனை
பாஜக சிறுபான்மை அணி வேலூர் கபீர் பிறந்த நாள்
நீதிமன்றம் முன்பு போலீசார் பாதுகாப்பு
மனைவியை தாக்கிய மத்திய ரிசர்வ் படை வீரர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?