மதுரை அக்டோபர் 4,
மதுரை வெள்ளைக்கல் திடக்கழிவு மேலாண்மை மையத்தில் எனர்ஜி பிளான் அமைக்க நிறுவன குழுவினர் ஆய்வு
மதுரை மாநகராட்சி இந்திய அளவில் சீர்மிகு நகரத்திற்கான CITIIS 2.0 திட்டம்”
வெள்ளைக்கல் திடக்கழிவு மேலாண்மை மையத்தில் WASTE TO ENERGY PLANT அமைப்பது குறித்து நிறுவன குழுவினர் ஆய்வு மேற்கொண்டார்கள். இந்திய அரசாங்கம் City Investment to Innovate Integrate and Sustain 2.0 (CITIIS 2.0) 5 31 2023 அங்கீகரித்துள்ளது. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வசதி அமைச்சகம் (MOHUA) French Development Agency (FDA), Kreditanstalt für Wiederaufbau (KfW), National Institute of Urban Affairs (NIUA) ஆகிய நான்கு நிறுவனங்கள் ஒருங்கிணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
சீர்மிகு நகரத்திற்கான CITIIS 2.0 போட்டியில் 100 சீர்மிகு நகரங்கள் பங்கேற்றதில் இந்திய அளவில் தேர்வான 18 மாநகரங்களில் தமிழ்நாட்டிலிருந்து மதுரை மாநகராட்சி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது இந்திய அரசு CITIIS 2.0 திட்டத்திற்காக மதுரை மாநகராட்சிக்கு ரூ.135 கோடி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. CITIIS 2.0 திட்டத்திற்காக மதுரை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை பணிகளின் கீழ் Waste to Energy component Plant பணிகள் மதுரை மாநகராட்சியில் மேற்கொள்ளுவதற்கு ரூ.314 கோடி மதிப்பீட்டில் முன்மொழிவு வேண்டி இந்திய அரசிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் Waste to Energy component பணிகள் மேற்கொள்வது குறித்து ஆணையாளர் ச.தினேஷ் குமார் தலைமையில் French Development Agency (FDA), Kreditanstalt für Wiederaufbau (KfW), National Institute of Urban Affairs (NIUA) की நிறுவனங்களின் குழுவினருடன் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.