அஞ்சுகிராமம் பிப் 16
சுரேஷ்ராஜன் விடுதலை: உற்சாகத்தில் திமுக தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் 2002ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் திமுக முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் மீது சொத்து குவிப்பு தொடரப்பட்டது
சொத்துக்குவிப்பு நடைபெற்று. வந்த நிலையில் வழக்கில் இருந்து திமுக முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜனை விடுதலை செய்து கன்னியாகுமரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. 1996-2001 ஆண்டுகளில் சுற்றுலா அமைச்சராக இருந்த சுரேஷ் ராஜன் வருமானத்திற்கு அதிகமாக ரூ.17 லட்சம் சொத்து சேர்த்ததாக 2002ல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு 2026 நடைபெறுகிறது.தேர்தலுக்கு திமுக ., அதிமுக, பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது.ஆளும்கட்சியான திமுக., வரும் தேர்தலில் 200 தொகுதியை கைப்பற்ற வியூகம் வகுத்து அதற்கான பணிகள் நடந்து வருகின்றன.இந்நிலையில் திமுக.,வில் செயல்படாத நிர்வாகிகள் மாற்றி புதிய நிர்வாகிகளை நியமிக்கபட்டு வருகின்றனர்.
ஆறு சட்டமன்ற தொகுதிகளை கொண்ட குமரி மாவட்டத்தில் இரண்டு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் நியமிக்கும் திட்டம் திமுக தலைமையிடம் உள்ளது. இந்நிலையில் முன்னாள் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சுரேஷ் ராஜனுக்கு சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுவித்து வழங்கி நாகர்கோவில் கோர்ட் தீர்ப்பளித்தது . சுரேஷ் ராஜனின் அரசியல் வாழ்க்கையின் முக்கியத்துவம் வாய்ந்த இந்த தீர்ப்பு அவரது ஆதரவாளர்கள் திமுக தொண்டர்கள் மத்தியில் கடும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக தலைமையிடம் நெருக்கமாக இருக்கும் சுரேஷ் ராஜனுக்கு குமரி மாவட்ட திமுக.,வில் முக்கிய பொறுப்பு விரைவில் அறிவிக்கப்படலாம் என்றும் அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
பொய்வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜனை திமுக மாநில வர்த்தக அணி இணை செயலாளர் வக்கீல்.தாமரைபாரதி, மயிலாடி பேரூராட்சி துணை தலைவர் சாய்ராம், அஞ்சுகிராமம் பேரூராட்சி துணை தலைவர் காந்திராஜ், திமுக நிர்வாகிகள் சுதன் மணி, செல்வின் சதீஷ்குமார்,தென் தாமரைக்குளம் பேரூர் செயலாளர் பூவியூர் காமராஜ், கொட்டாரம் பேரூர் செயலாளர் வைகுண்ட பெருமாள், லீபுரம் ஊராட்சி முன்னாள் தலைவர் முத்துசாமி, திமுக கவுன்சிலர் எட்வின் ராஜ்,வாத்தியார் செல்வக்குமார், மற்றும் பலர் நீதி வென்றதற்காக வாழ்த்து தெரிவித்தனர்.