திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் சார்பாக அசோக சக்ரா விருது பெற்ற மேஜர். முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாற்று திரைக்காவியமான அமரன் திரைப்படத்தைக் காண இந்திய ராணுவத்தின் முப்படை முன்னாள் ராணுவத்தினர் 100 நபர்களுக்கு திரைப்பட அனுமதி நுழைவு சீட்டை வழங்கி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி திண்டுக்கல் ராஜேந்திரா தியேட்டரில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் மேற்கு ரோட்டரி கிளப்பின் ஆலோசகர் Rtn.MAJOR DONOR G.சுந்தரராஜன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் அரசன் ரியல் எஸ்டேட் மற்றும் ஸ்வாகத் ஹோட்டல் உரிமையாளர் Rtn.MPHF.PP.S. சண்முகம் முன்னிலை வகித்தார். திண்டுக்கல் ராஜேந்திரா தியேட்டர் உரிமையாளர் கௌதம் கலந்து கொண்டு ராணுவ வீரர்களை வாழ்த்தி பேசினார். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக இந்திய ராணுவ முன்னாள் வீரர் கர்னல் N.வீரமணி கலந்து கொண்டு அசோக சக்ரா விருது பெற்ற மேஜர். முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாற்று திரைக்காவியமான அமரன் திரைப்படத்தைக் காண இந்திய ராணுவத்தின் முப்படை முன்னாள் நினைவாக முன்னாள் ராணுவத்தினர் 100 நபர்களுக்கு திரைப்பட அனுமதி நுழைவு சீட்டை வழங்கி அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் தலைவர் Rtn.H. புருஷோத்தமன், செயலாளர் Rtn.P.சந்திரசேகரன் ஆகியோர் சிறப்பாக ஒருங்கிணைத்தார்கள்.



