நாகர்கோவில் பிப் 6
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் காவல் நிலையத்தில் கந்துவட்டி கேட்டு மிரட்டிய வழக்கில் ரவுடி சரித்திர பதிவேடு குற்றவாளி ராஜன் என்ற சந்தை ராஜன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது குண்டு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின்படி, மாவட்ட ஆட்சித் தலைவர் அழகுமீனா மேற்படி குற்றவாளியை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார். மேலும் குமரி மாவட்டத்தில் கந்துவட்டி கேட்டு மிரட்டுவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ் பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.