தென்காசி நகர் மக்களின் 25 ஆண்டு கால குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணும் பொருட்டு தாமிரபரணி குடிநீர் திட்டம் பெற்றுத் தந்த தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவரும் தென்காசி சட்டமன்ற உறுப்பினருமான பழனி நாடார், தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர் ,தென்காசி அனைத்து நகர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் பாராட்டு விழா இந்தியா கூட்டணி சார்பில் தென்காசி இரயில்வே ஃபீடர் ரோடு அருகில் தனியார் மஹாலில் நடைபெற்றது.பாராட்டு விழாவிற்கு தென்காசி மாவட்ட மதிமுக அவைத்தலைவர் வெங்கடேஸ்வரன் தலைமை தாங்கினார் பாராட்டு விழாவில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார், தென்காசி நகர் மன்ற தலைவர் சாதிர், தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன், தென்காசி நகர காங்கிரஸ் தலைவர் மாடசாமி ஜோதிடர் ,தென்காசி மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் சந்தோஷ், துணைத் தலைவர் சித்திக், நகர பொருளாளர் ஈஸ்வரன் ,தென்காசி தெற்கு மாவட்ட மதிமுக செயலாளர் இராம. உதயசூரியன், விசிக மண்டல துணைச் செயலாளர் சித்திக், மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளின் தென்காசி மாவட்ட செயலாளர்கள் ,நகர செயலாளர்கள், முக்கிய உறுப்பினர்கள் தென்காசி நகர் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்
சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடாருக்கு பாராட்டு விழா

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics