கம்பம்.
தேனி மாவட்டம் கம்பத்தில் உத்தமபுரம் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளிமற்றும் முத்தையா நினைவு பிள்ளை மேல்நிலைப் பள்ளியில் ஜூன் 26 புதன்கிழமை மது போதை ஒழிப்பு தினமாக அனுசரிக்கப்பட்டது.இதில் காவல்துறை ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் உத்தமபாளையம் மதுவிலக்கு காவல்துறை ஆய்வாளர் மற்றும் அதிகாரிகள் பள்ளி தலைமை ஆசிரியர்,இருபால் ஆசிரிய பெருமக்கள் மாணவ மாணவிகள் முத்தையா பிள்ளை மேல்நிலைப் பள்ளியின் ஓவிய ஆசிரியர் பாண்டி, அன்பு அறம் செய் அன்பு ராஜா, சங்கமம் அறக்கட்டளை சுருளிப்பட்டி எஸ். சுரேஷ் குமார். மற்றும் பத்திரிகை நண்பர்கள் பொதுமக்கள் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு மது போதை விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் ஊர்வலமாக சென்றனர். பொதுமக்களுக்கு மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு காவல்துறையின் சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டது. துறை சார்ந்த அதிகாரிகள் கூறுகையில் .தற்பொழுது தேனி மாவட்டத்தில் நூற்றுக்கு 90சதவீதம் கஞ்சா ஒழிக்கப்பட்டு எதிர்கால சந்ததியினர்களுக்கு ஆங்காங்கே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.சிறு வயதிலேயே போதைக்கு அடிமையாகி தாய் தந்தையினரை இழக்கும் அளவிற்கு போதை தற்பொழுது தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கிறது.எனவே போதை என்பது நமது வாழ்வாதாரத்திற்கு மிகவும் தீய செயலாகும் இதிலிருந்து மாணவ மாணவிகள் தங்களை பாதுகாத்துக் கொள்ளவும் போதையினால் ஏற்படும் விளைவுகளை தாங்கள் மற்றவர்களுக்கு எடுத்துக் கூற வேண்டும் என்பது மிகவும் முக்கியமானதாகும். வாழ்வாதாரத்தில் பின் தங்கிய மாணவர்கள் மது மற்றும் கஞ்சா போதை ஊசி மாத்திரை போன்றவைகளுக்கு அடிமையாகி தற்பொழுது மன நிலமை பாதித்து திரிவதை எனது கண்கூட பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவர்களையும் சரி செய்யும் நற்செயலாக நமது தேனி மாவட்ட நிர்வாகம் கண்காணித்து அவர்களை நன்னடத்தை செய்வதற்கு வழி வகுத்து வருகின்றது. என்பதை இந்த நேரத்தில் கூறிக் கொள்கிறேன் என பேசினார். நிகழ்ச்சியினை உத்தமபாளையம் மதுவிலக்கு காவல்துறையினரும் பள்ளி நிர்வாகமும் இணைந்து சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.