மதுரை டிபிகே சாலையில் உள்ள அரசு மகளிர் பாலிடெக்னிக்
கல்லூரியில் நாட்டு நலப்பணிப் திட்டம் (NSS) மற்றும் Madurai City Police (PEW -மதுவிலக்குச் செயலாக்கச் சிறகம்) குழுவினரால்
கல்லூரி விழா அரங்கில் கல்லூரி முதல்வர் அமுதா தலைமையில்
விரிவுரையாளர்.
மோகன்குமார், முன்னிலையில் நடைபெற்றது.
விழாவில்
சிறப்பு விருந்தினராக
அருள் செந்தில், Revenue Inspector. சுந்தரபாண்டியன் SI, மதுவிலக்கு செயலாகத் துறை. வெங்கடேஷ் பாபு, முதல் நிலை காவலர் (மாநகர ஆயுதப்படை)
ஆகியோர் பங்கேற்று மாணவிகளுக்கு போதைப் பொருள் எதிர்ப்பு (Anti Drug) விழிப்புணர்வு குறித்து கலந்துரையாடினார்கள்.
அதனைத் தொடர்ந்து
போதைப் பொருள் துஷ்பிரயோகத்தின் ஆபத்துகள் மற்றும் போதைப் பொருள் இல்லாத ஆரோக்கியமான வாழ்க்கை நடத்துவதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் மாணவிகளுக்கு எடுத்துரைத்தனர்.அப்போது மாணவிகளில் பலர் போதைப் பொருள் நடமாட்டம் சம்பந்தமாகவும் அவற்றின் பாதுகாப்பு சம்பந்தமாகவும், குழுவினர்களிடையே தங்களின் கேள்விகளை எழுப்பி தக்க பதில்களை கேட்டுப் பெற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் ஆசிரியர் பெருமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.