பரமக்குடி, பிப். 28 : பரமக்குடியில் உள்ள பொன்னையாபுரம் சிவானந்தபுரம் நகராட்சி பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது எம்எல்ஏ கலந்துகொண்டு சிறந்த மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
பரமக்குடி நகராட்சிக்கு கீழ் செயல்பட்டு வரும் பொன்னையாபுரம் நகராட்சி தொடக்கப் பள்ளியில், 13 வது ஆண்டு விழா நடைபெற்றது.
தலைமை ஆசிரியை வசந்தி வரவேற்றார்.நகராட்சி ஆணையாளர் முத்துச்சாமி தலைமை வகித்தார்.
வட்டாரக் கல்வி அலுவலர் ரவிக்குமார், ஆசிரியர் பயிற்சி பள்ளியின் விரிவுரையாளர் இராமர்,வட்டார வளமைய மேற்பார்வையாளர் பாண்டீஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு நகர் மன்றத் தலைவர் சேது கருணாநிதி பரிசுகளை வழங்கினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பரமக்குடி எம்எல்ஏ முருகேசன் கல்வியில் சிறந்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினார்.அந்நிகழ்வின் போது, 2025-2026 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையில் 50 மாணவர்கள் முதல் வகுப்பில் சேர்க்கப்பட்டனர்.தொடர்ந்து,
மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், 30- வது வார்டு நகர்மன்ற உறுப்பினர்கள் மாரியம்மாள், தனலட்சுமி முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் செல்வி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியை லதா நன்றி கூறினார்.
பட விளக்கம்
பரமக்குடி பொன்னையாபுரம் நகராட்சி தொடக்க பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் எம் எல் ஏ மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.