ஊட்டி. டிச.08.
மத்திய அரசின் பொதுத்துறை வங்கியான ரெப்கோ வங்கி ( REPCO BANK ) இந்திய மாநிலங்களான தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களில் இயங்கி வருகிறது. தாயகம் திரும்பியோர் கூட்டுறவு வங்கியான ரெப்கோ வங்கியில் இந்திய வம்சாவளி மக்களான தாயகம் திரும்பிய தமிழர்கள் இலங்கை, பர்மா போன்ற நாடுகளில் இருந்து மீண்டும் தாயகம் திரும்பி அவர்களின் வாழ்க்கை மேம்பாடுக்காக வங்கியில் அ, வகுப்பு உறுப்பினர்களாக இணைய பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை கொண்டு பதிவு செய்யப்பட்டு இவ் வங்கியின் மூலம் ரெப்கோ ஹம் பைனான்ஸ் நிதி நிறுவனம் மூலம் மகளிர் குழுக்களை ஏற்படுத்தி தொழிற் கடன், வீடு கட்ட கடனுதவி, வாகன கடன் வசதிகளையும் ரெப்கோ வங்கி மூலம் தங்க நகை அடமான கடன் ரெப்கோ 56 கொண்ட டெபாசிட் திட்டங்கள் கல்வி ஊக்கத்தொகை நிதி வழங்கும் திட்டங்கள், மருத்துவ சிகிச்சைகளுக்கு உதவி திட்டங்கள் அ. வகுப்பு உறுப்பினர்கள் இறக்க நேரிட்டால் அல்லது பதிவு செய்யப்பட்ட அவர்களின் குடும்பத்தினர் யாரேனும் இறப்பு ஏற்பட்டாலும் அவர்களுக்கு இழப்பீடு தொகையாக இறந்தவர்களின் வாரிசுக்கு ரூ. 22,000 நிதியாக வழங்கும் திட்டம் போன்றவை அறிவிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. ரெப்கோ வங்கியில் கணக்குகள் தொடங்கப்பட்டு சேமிப்புகளும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிறப்பு திட்டங்களாக “ரெப்கோ 56′ 560 நாட்களுக்கு டெபாசிட் திட்டத்தை அறிமுகப்படுத்தி அதன் மூலம் மூத்த குடிமக்களுக்கு 8.75 சதவீத வட்டியும், மற்றவர்களுக்கு 8.25% வட்டி விகிதமும் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. அதேபோல் தங்க நகை அடமான கடனாக கிராமுக்கு ரூ. 5500 கடன் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. மேலும் 5. லட்சம் முதல் அனைத்து தேவைகளுக்கும் தங்களின் அசையா சொத்துக்களின் பேரில் வியாபாரம், வியாபார அபிவிருத்தி கடன், வீடு வாங்க, வீடு கட்ட, வீடு பராமரிப்பு, திருமண செலவு மற்றும் அனைத்து குடும்ப அவசர தேவைகளுக்கும் சிறப்பு அடமான கடன் உதவிகளும் வழங்கப்படுகிறது. இவ் வங்கியில் அ. வகுப்பு உறுப்பினர்களாக பதிவு செய்யப்பட்ட விதவைப் பெண்களுக்கு 72 வயதுக்குள் தையல் மெஷின் போன்ற தொழில் சார்ந்த உபகரணங்களும் வழங்கப்படும் திட்டத்தையும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ரெப்கோ வங்கி கிளைகளின் மூலம் சிறப்பு தங்க நகை கடன் திட்டம், சிறப்பு அடமான கடன் திட்டம், சிறப்பு டெபாசிட் திட்டம் போன்ற திட்டங்களை ரெப்கோ வங்கி அறிவித்து செயல்படுத்தி வருகிறது தாயகம் திரும்பியோர் கூட்டுறவு வங்கியான ரெப்கோ வங்கியில் மேற்கண்ட திட்டங்களை பொதுமக்கள் மற்றும் அ. வகுப்பு பதிவு செய்தவர்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென மாவட்டத்தில் உள்ள வங்கியின் மேலாளர்கள் ,
இவ்வங்கியின் பிரதிநிதிகள்
கேட்டுக்கொண்டுள்ளனர்.