தாம்பரம்
ஜனவரி 6
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சி 64வது வட்டம் ஆனந்தபுரம் பகுதியில் அமைந்துள்ள பார்க்கவே மரியாள் அன்னை வேளாங்கண்ணி மாதா கெபி 10ஆம் ஆண்டு திருவிழா ஜே.ஜோயல் அவர்களின் தலைமையில் நடைபெற்றது இந்த 10ஆண்டு நிறைவு விழாவில் தாம்பரம் மாநகராட்சி மேயர் திருமதி வசந்தகுமாரி கமலக்கண்ணன் அவர்கள் கலந்து கொண்டு அன்னதானம் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் 64வது வட்டக் கழக செயலாளர் ரமேஷ், மாமன்ற உறுப்பினர் ஷகிலா ஜான்சி மேரி, அதிமுக நகர செயலாளர் எம்.கூத்தன், காங்கிரஸ் பேரியக்கத்தின் மூத்த முன்னோடி ஜி.டி.சேகர், காங்கிரஸ் பேரியக்கத்தின் தாம்பரம் நகர தலைவர் ஜே.பி.விஜய் ஆனந்த், திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் மாரத்தான் விக்கி என்கின்ற ஏ.விக்னேஸ்வரன்,
அதிமுக வட்ட செயலாளர் ஏ.கே.வி.ஜீவன் ஜீவா, விடுதலை சிறுத்தை கட்சியின் பகுதி கழக செயலாளர் ஆதி சாலமன், ஜிடிஎஸ்.பிரபு, திமுக முன்னாள் வட்டக் கழக செயலாளர் எஸ்.சந்திரன், பி.பிரேம், வழக்கறிஞர் சிவா, பி.ரியாஸ்கான், என்.அரவிந்த்ராஜ், எம்.திவாகர், எஸ்.சாய் உள்ளிட்ட ஆலய நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் ஜே.பிரேம் அவர்கள் நன்றி உரையாற்றினார்.