இராமநாதபுரம், பிப், 21
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சுதந்திர போராட்ட தியாகி அஞ்சலையம்மாள் நினைவு தினம் கமுதியில் அனுசரிப்பு இராமநாதபுரம் மாவட்டம், கமுதி பேருந்து நிலையம் எதிரே தமிழக வெற்றிக் கழக இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் சார்பில் சுதந்திரப் போராட்ட தியாகி அஞ்சலையம்மாள் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. கழக பொதுச்செயலாளர் ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின் படி, இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் மலர்விழி ஜெயபாலா ஆலோசனையின்படி, இராமநாதபுரம் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் மதன் தலைமையில், சுதந்திரப் போராட்டத் தியாகி அஞ்சலையம்மாள் நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது திருவுருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.