மயிலாடுதுறை மாவட்டம்
மயிலாடுதுறை டவுன் வேலாயுதம் நகரில் விளையாட்டு மைதானத்திற்காக ஒதுக்கப்பட்ட இடம் நகராட்சி நிர்வாகத்திடன் ஒப்படைக்கப்பட்டது. தற்போது இந்த விளையாட்டு மைதானம் போதிய பராமரிப்பு இல்லாததால் முள், புதர்கள் மண்டி, விஷஜந்துக்கள் பெருகி யாவருக்கும் உபயோகமற்ற நிலையில் பொதுமக்கள் குப்பை கொட்டும் இடமாகவும் மாறி உள்ளது.
உடனடியாக நகராட்சி நிர்வாகம் தலையிட்டு விளையாட்டு மைதானத்தை சுத்தம் செய்து இளைஞர்களும், மாணவர்களும், பொதுமக்களும், குழைந்தகளும் நடை பயிற்சி மற்றும் விளையாட்டிற்கு பயன்படுத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பாஜக மாவட்ட துணைத்தலைவரும்,தூய்மை இந்தியா ஒருங்கிணைப்பாளருமான மோடி.கண்ணன் மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் சங்கரிடம் மனு அளித்தார். தொடர்ந்து இடத்தினை ஆய்வு செய்து பொது மக்கள் பயன்பெறும் வகையில் விளையாட்டு மைதானமாக மேம்படுத்தி கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார். பாஜக தேசிய தேசிய செயற்குழு உறுப்பினர் சேதுராமன், ஓபிசி அணி முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளர் மயில்ரவி, மாவட்ட செயலாளர் சந்தோஷ் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.