நாகர்கோவில் ஏப் 15
தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி விஜய் உத்தரவு படி,பொதுச்செயலாளர் ஆனந்த் வழிகாட்டுதலின்படி
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.மாதவன் தலைமையில் சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் பிறந்த தினத்தை முன்னிட்டு நாகர்கோவில் அண்ணா ஸ்டேடியம் முன்புள்ள அண்ணல் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.மாதவன் கலந்து கொண்டு அம்பேத்கரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதேபோல் ஆரல்வாய்மொழி பேரூராட்சி 15 வது வார்டு நிர்வாகிகள் சார்பில் ஆரல்வாய்மொழியில் டாக்டர் அம்பேத்கர் உருவபடத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது .இதில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.