மதுரை ஏப்ரல் 23
மதுரை கோ.புதூர் அல்-அமீன் மேல்நிலைப்பள்ளியில் 2024-2025 ஆம் கல்வியாண்டில் அரசு பாடத்திட்டப்படி மாணவர்கள் பயின்ற ஓவியக் காட்சி மற்றும் ஓவிய ஆசிரியரின் வழிகாட்டுதலில் கற்பனையில் வரைதல், வண்ணம் தீட்டுதல், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஓவியங்கள், போட்டிகளுக்கான படங்கள், போன்றவைகள் மாணவர்கள் தன்னார்வமுடன் வரைந்து பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இதில் கருப்பசாமி 7-ஆம் வகுப்பு மாணவன் 321 ஓவியங்கள் வரைந்து முதலிடமும், இஸ்மாயில் 150 ஓவியங்கள் வரைந்து இரண்டாமிடமும் சபின் அகமது 121 ஓவியங்கள் வரைந்து மூன்றாமிடமும் பெற்றுள்ளனர்.
மாணவர்களுக்கு நடைபெற்ற பரிசளிப்பு மற்றும் சான்றிதழ் வழங்கும் விழாவில் பள்ளித் தலைமை ஆசிரியர் ஷேக் நபி, உதவி தலைமை ஆசிரியர்கள் ஜாகிர் உசேன் மற்றும் ரஹ்மத்துல்லா, ஓவிய ஆசிரியர் சண்முகசுந்தரம், தமிழ் ஆர்வலர் ஆதித்தா மற்றும் ஆசிரியர்கள் அல்ஹாஜ் முகமது, அபுதாஹிர், சலாவுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.