வேலூர்=11
வேலூர் மாவட்டம், வான் படைக் கழகம் வேலூர் சார்பில் 92 வது ஆண்டு ஆகாய விமான திருநாள் கொண்டாட்டம் வேலூர் ஆசிரியர் இல்லத்தில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் நாற்சக்கரம் வழங்குதல் நிகழ்ச்சியும் விழாவில் தம்போலா கேம் விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பெண்கள் குழந்தைகளுக்கு வான்படை கழகம் சார்பில் பரிசுகள் வழங்கினர் சிறப்பு அழைப்பாளர் கமோடோர் கே .வி .விஜய கோபாலன், வேலூர் படைவீரர் நலவாரியம் உதவி இயக்குனர் கர்னல் ஆர் .பி. வேலு, ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி நிகழ்ச்சியினை துவக்கி வைத்தனர். உடன் தலைவர் குரூப் கேப்டன் ஆர். துரைராஜ், செயலாளர் சார்ஜன்ட் எம். விஜயகுமார், பொருளாளர் JWO எம். கோபிராஜன் ,மற்றும் வான்படை கழகம் குடும்பத்தினர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.