நாகர்கோவில் – அக் – 18,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரியில் அஇஅதிமுக – வின் 53-வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கழக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவின் பேரில் நேற்று நாகர்கோவில் வடசேரி சந்திப்பில் உள்ள அதிமுக நிறுவனர் தமிழக முன்னாள் முதலமைச்சருமான டாக்டர். எம்.ஜி. ஆர் அவர்களின் திருவுருவ சிலைக்கு அதிமுக குமரி மாவட்ட பொருப்பாளர் ஜாண் தங்கம் , மற்றும் அதிமுக வடக்கு மண்டல தலைவரும் நாகர்கோவில் மாநகராட்சி உறுப்பினருமான ஸ்ரீ லிஜா மற்றும் நாகர்கோவில் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் நாஞ்சில் முருகேசன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொண்டர்களுக்கும் பொது மக்களுக்கும் இனிப்புகள் வழங்கினர். வடக்கு மண்டலம் சார்பாக ஏழை எளிய மக்களுக்கு சுமார் 2000 -க்கும் மேற்பட்டவர்களுக்கு இலவச வேட்டி , சேலை வழங்கினர்.இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமாக கலந்து கொண்டனர். தொண்டர்கள் அனைவரையும் வரவேற்க்கும் விதமாக சாலையோரம் அதிமுக கட்சி கொடிகள் நடப்பட்டு, மேள ,தாளம், முழங்க இசை கச்சேரிகளும் , வாணவேடிக்கைகள் விடப்பட்டது. இதனால் அப்பகுதி முழுவதும் விழாக்கோலம் போன்று காட்சி அளித்தது. காண்போரை கவரும் விதத்தில் அமைந்திருந்தது. தாகம் தனித்த பொதுமக்களுக்கு குடிநீர் பாட்டில்கள் விநியோகிக்கப்பட்டன. குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் சாலையில் போக்கு வரத்து நெரிசல் ஏற்ப்படாத வண்ணம் வடசேரி காவல் நிலைய ஆய்வாளர் ஜெயலெட்சுமி தலைமையில் போலீசார், மற்றும் போக்குவரத்து பிரிவு காவலர்கள் சாலையில் போக்குவரத்து நெரிசல் இன்றி வாகனங்கள் செல்லும் விதத்தில் போக்குவரத்தினை சிறப்பான முறையில் செயல்படுத்தினர்.