அரியலூர், ஜூலை:24
மின் கட்டண உயர்வைக் கண்டித்து, அரியலூர் அண்ணாசிலை அருகே அதிமுகவினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், தமிழக மக்களை வாட்டி வதைக்கும் மின் கட்டணத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும். நியாய விலைக் கடைகளில் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை நிறுத்த முயற்சி செய்யும் நடவடிக்கையை கைவிட வேண்டும். புதிய குற்றவியல் சட்டடத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்டகோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டச் செயலரும், முன்னாள் அரசு தலைமைக் கொறடாவுமான தாமரை எஸ்.ராஜேந்திரன் தலைமை வகித்து கண்டன உறையாற்றினார்.
அவைத் தலைவரும், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான ராமஜெயலிங்கம், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் இளவழகன், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் இளவரசன், மாவட்ட பொருளாளர் அன்பழகன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பொ.சந்திரசேகர், நகரச் செயலர் ஏ.பி.செந்தில், மாவட்ட அம்மா பேரவைச் செயலர் ஒ.பி.சங்கர், இணைச் செயலர் நா.பிரேம்குமார், ஒன்றியச் செயலாளர்கள் செல்வராஜ், பாலசுப்பிரமணியன், முன்னாள் அரசு வழக்கறிஞர் எஸ்.சாந்தி, வழக்குரைஞர் அணியினர் வெங்கடாஜலபதி, செல்ல சுகுமார், ராமகோவிந்தராஜன், மகளிரணிச் செயலர் ஜீவா அரங்காநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்